50+ Tamil Love Failure Kavithai SMS Collections Love Failure Man's Words

காதல் தோல்வியால் வாடும் பல இளைஞர்களை அவர்கள் உணர்வுகளை எண்ணங்களை புரிந்து கொள்ள யாரும் இல்லை நமக்கென்று யாரும் இனி இல்லை என்று எண்ணத்தை உருவாக்கி அதனால் மனமுடைந்து தற்கொலையோ அல்லது வேறு திசை மாறி பயணம் செய்யவோ தூண்டாமல்  இருக்க இந்த கவிதைகள் காதலில் தோல்வி அடைந்தவர்கள் படித்து மனம் ஆறுதல் அடைய எழுதப்பட்டவை. அவர்கள் வாழ்க்கை திசைமாறாமல் நேர்வழியில் சென்று வாழ்க்கையில் முன்னேறி செல்ல உதவும் இந்த கவிதைகள். 


இந்த பதிவு “காதல் தோல்வி கவிதை” உள்ளடக்கியுள்ளது.


வலியால் துடிக்கிறேன்..!

தனியா உணர்ந்தேன்..!

Love Failure Words :




50+ Tamil Love Failure Kavithai SMS Collections Love Failure Man's Words
50+ Tamil Love Failure Kavithai SMS Collections Love Failure Man's Words




வலியால் துடிக்கிறேன்..!

என் மனம் எனும் குளத்தில்
விழி என்னும் கல்லை
விதி என வந்து எறிந்தாளே!
அலை அலையாக ஆசைகள்
எழும்ப அவள் பின்னே அலைந்தேனே..!

நினைவுகளாலே நிச்சயதார்த்தம்
நடந்தது அவளோடு..!
கனவுகளாலே கல்யாணமும் 
நிகழ்ந்தது அவளோடு..!
என் நினைவில் நிறைந்த 
கனவில் கரைந்த உனக்கு
எவனோடு நடக்க இருக்கிறது திருமண ஏற்பாடு..! 
அன்பே நீ இல்லாது தொண்டையில் 
இறங்க மறுக்குது சாப்பாடு..!
இனி நீ அல்லாது அடுத்தவள்
மாலை ஏற்பது பெரும் பாடு..!

ஒரு புறம் காதலன் மறு புறம் அப்பன்
இரு தலை கொள்ளி எறும்பானாய்..!
காசுக்காக காதலை தொலைத்து
ஆலையில் கரும்பானாய்..!
பாசத்துக்காக உயிரை மறந்து
பட்டறையில் இரும்பானாய்..!
 
நதி வழி போனால் 
கரை வரக்கூடும்-ஆனால் 
அவள் வீதி வழி போனேனே..!
விதை ஒன்று நான் போட
களை ஒன்று முளைத்த
கதை என்று ஆனேனே..!

கற்பை போல காதலை காத்தேன்..!
தெய்வம் போல அவளை பார்த்தேன்..! 
காதல் தோற்கும் என்றா நினைத்தேன்..?
காதலி போவாள் என்றா பார்த்தேன்..?
என்ன சொல்வது 
நான் கொண்ட காதலுக்காக
அவள் கொண்ட மாற்றத்திற்காக  
வலியால் துடித்தேன்..!


தனியா உணர்ந்தேன்..!

வேண்டான்னு நான் சொல்ல 
வம்புல நீ தானே
இழுத்து விட்டாய்..!
போடின்னு நான் விரட்ட
நீ தானே காதலில் மாட்ட வைத்தாய்..!
நட்பாய் இருந்த என் மனசை 
நீ தானே தடுமாற செய்து விட்டாய்..!
கறுப்பாக இருந்த என் கனவை 
நீ தானே கலராய் மாற வைத்தாய்..!.

என்னுடன் நடந்த என் நிழலை 
தனியாய் நடக்க விட்டாய்..!
உள்ளே இருந்த என் உயிரை
ஊரே மிதிக்க விட்டாய்..!
கனவாய் இருந்த என் காதலை
கரும்புகையாய் ஆக்கி விட்டாய்..!
உனக்குள் இருந்த என்னை 
வீதியிலே அலைய விட்டாய்..!

ஒன்றாய் இருந்த நம்
ஞாபகத்தை மனதில்
பதுக்க வைத்தாய்..! 
தனியாய் இருக்கும் வலியை மட்டும்
தனியாய் உணர வைத்தாய்..!


Love Failure Words :

அவள் கொண்ட காதலுக்கும் 
காதலர் தினம் கொண்ட "பிப்ரவரி"கும் 
ஆயுள் குறைவு தான்..!

Post a Comment

0 Comments